Wednesday, April 6, 2016

பிருந்தாவனம் கோகுலம் (ஆய்ப்பாடி)







பிருந்தாவனம் (वृन्दावन) உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரிடமாகும். இது இந்துக்களின் புனித இடமாக வழிபடப்படுகிறது. கண்ணனின் பாலபருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர். கண்ணனின் இளமைக் கால வாழ்க்கை யோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக `விரஜபூமி' என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இங்கு ராதை மற்றும் கிருஷ்ணரின் வழிபாட்டுக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோயில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. இங்கு இந்துமத குறிப்பாக வைணவம், கௌடிய வைணவ மத பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. பிருந்தாவன நகரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. சமஸ்கிருத மொழியில் பிருந்தா என்றால் துளசி எனவும் வனம் என்றால் காடு எனவும் பொருள். இன்றுமிப்பகுதியிலுள்ள நிதிவனம் மற்றும் சேவாகஞ்ச் இரண்டும் துளசிச் செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. டில்லியில் இருந்து ஆக்ரா செல்லும்வழியில் அமைந்த மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான கோகுல் (ஆயர்பாடி), பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களையும் இணைத்து, "கிருஷ்ண ஜென்மபூமி'’ அல்லது விரஜ பூமி என்கின்றனர். இவை முக்கோணவடிவில் அமைந்துள்ளன. ஆழ்வார்கள் இத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளனர். மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, "ஜென்மபூமி' என்று பெயரிட்டுள்ளனர். இங்கு ஓடும் யமுனை நதி கங்கையைப் போன்று புனிதமானதாக வணங்கப்படுகிறது. இந்த நதியை, "தூய பெருநீர் யமுனை' என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் பிருந்தாவனம் உள்ளது.

பிருந்தாவனத்தில் பனிரெண்டு காடுகள் உள்ளன. இவற்றுள் ஏழு வனங்கள் யமுனையின் மேற்குக் கரையிலும் ஐந்து கிழக்குக் கரையிலும் உள்ளன

    மகாவனம்
    காம்யவனம்
    மதுவனம்
    தாளவனம்
    குமுத வனம்
    பாண்டிரவனம்
    பிருந்தாவனம்
    கதிரவனம்
    லோஹவனம்
    பத்ரவனம்
    பஹுளாவனம்
    பில்வவனம்

 வரலாறு

     இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட
எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. சுருக்கமாக இதன்
வரலாற்றை ஒரே வரியில் சொன்னால் கண்ணனின் பால பருவ வளர்ச்சிதான்
கோகுலம்.

மூலவர்

     நவமோகன கிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     ருக்மணி தேவியார், சத்திய பாமா

விமானம்

     ஹேம கூட விமானம்

காட்சி கண்டவர்கள்

     கோகுல வாசிகள்

சிறப்புக்கள்

     1. இங்கு யமுனையை அடைந்ததும் கண்ணன் வாசனை வந்துவிடுகிறது.
ஒரு காலத்தில் (துவாபரயுகத்தில்) இங்கு கண்ணன் பாலகுமாரனாக ஓடியாடி
விளையாடி லீலை செய்த காட்சிகளை நினைவு கூறும்போது மெய்சிலிர்க்க
வைக்கிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1
கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி
என்று சொல்லப்படுகிறது. அதாவது எல்லாமே கோகுலம் என்று சொன்னாலும்
இந்த இடம் மட்டுமே கண்ணனின் ஸாநித்தியம் நிரம்பி வழிந்த இடமாகும்.
புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை
நதிக்கரையில் ஒரு ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை,
பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள விக்கிரகங்கள் யாவும் மரத்தினால் செய்யப்பட்டவையாகும். மர
விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் பொருந்தியனவாகும்

2. இது கண்ணன் வளர்ந்த இடமல்லவா. எனவே தான் ஆண்டாள்
சீர்மல்கும் ஆயப்பாடி என்றார். இங்கு தினமும் ஆட்டமும், பாட்டும், கூத்தும்
கொண்டாட்டமாக திகழ்ந்ததென்பதை பெரியாழ்வார்பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ஆகியன அவற்றுள் சிலவாகும். இதில் கோவிந்த தேவ் மந்திர் எனப்படுவது கி.பி.1590 இல் கட்டப்பட்டதாகும். பிருந்தாவன் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை காடுகளுக்கிடையே மறைந்திருந்ததாகவும் 1515-இல் சைதன்யர் என்ற புனிதர் கிருஷ்ணர் தொடர்புடைய இடங்களை எல்லாம் காணவேண்டும் என்ற நோக்கத்தோடு வந்தபோது பிருந்தாவனத்தைக் கண்டறிந்ததார். கிருஷ்ணரின் மீது தெய்வீகக் காதல் கொண்ட ஆண்மீக நோக்குடன் பிருந்தாவனத்தின் வெவ்வேறு புனித இடங்களில் அலைந்து திரிந்து அவரது ஆன்ம சக்தி மூலன் இதனைக் கண்டறிந்தார் என நம்பப்படுகிறது. கடந்த 250 ஆண்டுகளில், நகரமயமாக்கலின் விளைவாக பிருந்தாவனத்தின் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் ஒரு சில இடங்களைத் தவிர மற்றவை எல்லாம் உள்ளூர் வாசிகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளால் குறைந்து வருகின்றன. இக்காடுகளில் உட்பட மயில் கள், கால்நடைகள், குரங்கு கள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் காணப்படுகின்றன. ஒரு சில மயில்களைத் தவிர குரங்குகள், மாடுகளை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணலாம். கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி'யில் உள்ளன. இந்த `விரஜ பூமி' சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா' எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், `பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.


மங்களாசாசனம்



     தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன் மார்
          கற்றானிரைப் பின் போவர்
     நீ யாய்ப்பாடி யிளங்கன்னி மார்களை
          நேர்ப்படவே கொண்டு போதி
     காய்வார்க் கென்று முகப்பனவே செய்து
          கண்டார் கழறத் திரியும்
     ஆயா, உன்னை யறிந்து கொண்டே உனக்
          கஞ்சு வனம்மம் தரவே (231)
                  பெரியாழ்வார் திருமொழி 3-1-9

     தன்னைத் தாயாகப் பாவித்துக் கொண்டு கண்ணனைக் குழந்தையாக
பாவித்துக் கண்ணனுக்கு பால் கொடுக்க ஒரு தாயின் மனோபாவத்தில்
பெரியாழ்வார் அழைக்கிறார்.

     இந்த ஆயர்பாடியில் அன்னையர்கள் மோர் விற்கப் போய்விடுவர்.
அப்பன்மார்கள் பசுமேய்க்கச் சென்றிடுவர். ஆனால் கண்ணா நீயோ
இங்குள்ள கன்னிப் பெண்களையெல்லாம் உன் பேரழகைக் காட்டி மாயம்
செய்து உன்னைப் பின் தொடர வைத்துக் கொண்டு போய் விடுகிறாய்.
உன்னைக் கண்டிப்பவர்க்குக் கூட அவர்கள் சந்தோஷம் அடையும்
செயல்களைச் செய்யக்கூடிய கண்ணனே உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள,
எனக்கு பெருவியப்பாயுள்ளது. ஆம் உன்னைப் பற்றி நான் தெரிந்து
கொண்டேன். உனக்கு (அம்மம்) பால் தரவே எனக்குப் பயமாக உள்ளது
என்று யசோதையின் (தாய்) மனோபாவத்தில் பெரியாழ்வாரால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா
செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8
மைல் தூரத்தில் உள்ளது.

   

வரலாறு

     இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட
எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. சுருக்கமாக இதன்
வரலாற்றை ஒரே வரியில் சொன்னால் கண்ணனின் பால பருவ வளர்ச்சிதான்
கோகுலம்.

மூலவர்

     நவமோகன கிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     ருக்மணி தேவியார், சத்திய பாமா

விமானம்

     ஹேம கூட விமானம்

காட்சி கண்டவர்கள்

     கோகுல வாசிகள்

சிறப்புக்கள்

     1. இங்கு யமுனையை அடைந்ததும் கண்ணன் வாசனை வந்துவிடுகிறது.
ஒரு காலத்தில் (துவாபரயுகத்தில்) இங்கு கண்ணன் பாலகுமாரனாக ஓடியாடி
விளையாடி லீலை செய்த காட்சிகளை நினைவு கூறும்போது மெய்சிலிர்க்க
வைக்கிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1
கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி
என்று சொல்லப்படுகிறது. அதாவது எல்லாமே கோகுலம் என்று சொன்னாலும்
இந்த இடம் மட்டுமே கண்ணனின் ஸாநித்தியம் நிரம்பி வழிந்த இடமாகும்.
புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை
நதிக்கரையில் ஒரு ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை,
பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள விக்கிரகங்கள் யாவும் மரத்தினால் செய்யப்பட்டவையாகும். மர
விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் பொருந்தியனவாகும்

2. இது கண்ணன் வளர்ந்த இடமல்லவா. எனவே தான் ஆண்டாள்
சீர்மல்கும் ஆயப்பாடி என்றார். இங்கு தினமும் ஆட்டமும், பாட்டும், கூத்தும்
கொண்டாட்டமாக திகழ்ந்ததென்பதை பெரியாழ்வார்

     உறியை முற்றத் துருட்டி நின் றாடுவார்
          நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
     செறி மென் கூந்தலவிழத் திளைத்து, எங்கும்
          அறிவிழிந்தன ராயப்பாடி யாயரே

     அதாவது எப்படியும் கண்ணன் வெண்ணெய்த் திருடிவிடுவான் என்று
நினைத்து முற்றத்தில் நின்று உறியை உருட்டி விடுவார்களாம். தயிரை வாரி
வாரி தன் தோழர்கட்கு பங்கு வைத்துவிடுவாரென்று நினைத்து தாமாகவே
தயிரை எடுத்து தூவி நிற்பார்களாம். இங்கு கண்ணனின்
வேலையென்னவென்றால், பற்றுமஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில் சிற்றில்
சிதைத் தெங்கும் தீமை செய்து திரியாயே என்பதுதான்.

     3. ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களும், மூர்த்திகளும் இப்போது
இல்லையென்றும், தற்போதிருப்பவை வெகு பிற்காலத்தவை என்றும்
கூறப்படுகிறது. இருப்பினும் ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஒரு
கோவிலுக்கும், ஒரு பெருமாளுக்கும் மட்டும் என்று கொள்ளக்கூடாது.
ஆயர்பாடி முழுமைக்கும் மங்களாசாசனம் பொருந்தும் மதுராவில்
இப்போதுள்ள தொன்மைமிக்க கோவில்களையும், யமுனையையும் ஆழ்வார்கள்
மங்களாசாசனம் செய்ததாகவே கொள்ளலாம்.

     4. அயோத்தியைப் போலவும், துவாரகை போன்றும் பரபரப்பாகக்
காணப்படாவிடினும் அமைதி தவழும் ஆரண்யம் போல் திகழ்கிறது கோகுலம்.

     5. பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவராலும் 22
பாசுரங்களில் மங்களாசாசனம்.

     6. ஆயர்பாடியைச் சேவித்தவர்கட்குச் செல்வம் சேருமென்பது ஐதீஹம்.

     7. சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த
ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு ஒருத்தி மகனாய்ப் பிறந்து
ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்துக்

கொண்டு வரப்படுகிறான். நந்த கோபன் குழந்தையை எடுத்துக் கொஞ்சி
மகிழ்கிறான். ஆயர்கட்குப் பொன்னும் மணியும் பரிசலாக வாரி வழங்குகிறான்.
கண்ணன் வரவினால்கோகுலமே மகிழ்ச்சிப் பெருக்கில் தத்தளித்துக்
கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்த தினம் வந்தவுடன் கோகுலம் விழாக்
கோலம் பூணுகிறது. இந்த நிகழ்ச்சியை நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும்
கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின்
மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம். வடநாட்டிலும், பிற முக்கிய
ஸ்தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா
மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும்
நடத்தப்பட்டு வருகிறது.

     கண்ணன் கோகுலம் வந்துற்ற செய்தியைக் கேட்டதும் அவ்வூர்
வாசிகளின் ஆராவாரத்தை பெரியாழ்வார் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.

     ஆயர்கள் வேகமாக ஓடி வருகிறார்களாம். விரைந்தோடி வரும்போது
கால் தடுமாறி விழுந்து விடுகின்றனராம். அச்சமயம் கண்ணனைப் பார்த்துவிட்டு
எதிரே வருபவர்களை ஆனந்தம் மிகுதியால் ஆரத்தழுவிக் கொள்கின்றனராம்.
கண்ணனைப் பார்த்துவிட்டு வந்து விட்டீர்களா என்று சந்தோஷம் மிகுதியால்
ஆலிங்கனம் செய்துகொள்கின்றார்களாம். எதிரும் புதிருமாக வருவோர்
போவோரிடமெல்லாம் நம்பி எங்கிருக்கிறான். நாராயணன் எங்கிருக்கிறான்
என்று கேட்கிறார்களாம். பலவித இசைக்கருவிகளை எடுத்து கொட்டி முழக்கி
ஆட்டம் போடுகிறார்களாம். இந்தக் கதியாயிற்று ஆயப்பாடி என்று
வர்ணிக்கிறார்.


     ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
          நாடுவார் நம்பி நாரணனெங்குற்றா னென்பார்
     பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
          ஆடுவார்களு மாயிற்றாய் பாடியே - 14

     8. இந்த ஆயர்பாடியில் கண்ணனின் சேஷ்டைகளைப் பொறுக்காத
யசோதை ஒரு நாள் கண்ணனைக் கட்டிப் போட்டு விட்டாள். இந்நிகழ்ச்சியை
ஆய்ச்சியர் குரவையில் இளங்கோவடிகள் கூறுகிறார்.

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
        கடல்வண்ணன் பண்டொரு நாள் கடல்வயிறு கலக்கினையே
   கலக்கிய கை அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்ணகை
        மலர்க்கமல உந்தியாய் மாயமோ? மருட்கைத்தே.

     மலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக்
கொண்டு கடலை கலக்கிய உன் கைகளை தன் வீட்டில் கிடந்த சாதாரண
கயிற்றை எடுத்துக் கட்டிப் போட்டு விட்டாளே அசோதையென்று இவர்
மயங்குகிறார்.

     ஆனால் ஆழ்வாரோ இவ்வாறு உன் அன்னை உன் கைகளை
உரலினோடு இணைத்துக் கட்டிப் போட்டாளே அதனை எப்படி ஏற்றுக்
கொண்டு அந்த உரலுடன் இணைந்திருந்தாயோ என்று ஏங்குகிறார்.


     மத்துறு கடை வெண்ணெய் களவினில்
          உரலிடை யாப்புண்டு
     எத்திறம் உரலினோடு இணைந்திருந்து
          ஏங்கிய எளிவே
                         என்பது நம்மாழ்வார்

     9. பூதகியை கொன்றது, கம்சவதம் செய்தது, கன்றுகள் மேய்த்து
திரும்பியது, நந்த கோபர் வீட்டுக்கு முன் இருந்த மரங்களை முறித்தது
கோபியரோடு ஆடியது, சிற்றில் சிதைத்து என்று ஆயர்ப்பாடி வரலாற்றை
நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

     10. எம்பெருமான்ரஸோ வைஸா என்று வேதம் வர்ணிக்கிறது
அதாவது நீதான் சிறந்த ரஸம். பகவானை விட சிறந்த ரஸனை உள்ளவன்
இல்லை என்று வேதம் வர்ணிக்கிறது.

     இந்த ரஸோ வைஸ என்பது கிருஷ்ணவதாரத்திற்கே அதிலும் குறிப்பாக
கோகுல வாசத்திற்கே சாலவும் பொருந்தும் என்பது பெரியோர் வாக்கு.

     எம்பெருமானே நீ மகாவல்லவன். அர்ச்சாவதாரத்தில் (கண்ணனாக)
குருந்த மரங்களை முறித்தாய். பரசுராமனை அடக்கினாய். விரோதிகளை
அழிக்காமல் இருக்கமாட்டாய். அது உனது பொழுதுபோக்கு. கோபிகா
ஸ்திரீகளோடு இரண்டறக் கலந்திருந்தாய். உன்

அன்னைக்கு உனது வாயில் சகல பிரபஞ்சங்களையும் காட்டியது போல
(அன்னை போன்ற உள்ளம் உள்ளோர்க்கு) உனது சுயரூபத்தைக் காட்டுகிறாய்.
இப்படி வேறுபட்ட ரஸானுபவங்கள் பெற்றவனாய்த் திகழ்கிறாய். இவ்வுலகத்து
உயிரினங்கள் எல்லாம் உன் ரஸானுபவத்திலேயே பொழுது போக்குகின்றன.
நீயும் இந்த ரஸனையில் கலந்து மூழ்கியுள்ளாய். ரசிகன் உள்ள இடத்தில்
உள்ள பொருள்கள் எல்லாம் ரசப்பொருட்களாகவே இருக்கும். ரசிகர்களும்
ரசிகனைச் சுற்றியே வாழ்வர்.

     ரஸோ வை ரஸ, என்று வேதமும் உன்னைச் சிறந்த ரஸம் என்கிறது. நீ
இருக்கும் இடம் ரஸம் நிறைந்ததாகவே இருக்கிறது. கிருஷ்ண ரஸாயணம் பிப
என்றார் குலசேகரர். அவர் சொன்னபடி கிருஷ்ணரஸாயணத்தை (கிருஷ்ண
சரித்திரங்களை) உண்டு சுவைப்பதிலேயே உயிரினங்களும்
காலங்கடத்துகின்றன.

     என்னே அருமையான ரஸபாவனையில் மூழ்கியுள்ளனர் பெரியோர்கள்.


 

No comments:

Post a Comment