Tuesday, April 5, 2016

ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர த்தோத்ரம்

சிவபஞ்சாக்ஷர த்தோத்ரம் 

 

1.நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய!
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!
நாகங்களை ஹாரமாகக் கொண்டவரும், விலக்ஷணயான கண்ணையுடையவரும், விபூதி பூசியவரும், மஹேச்வரனாயும், நித்யராயும் சுத்தராயும், திசைகளையே ஆடையாக உடையவருமான அந்த நகாரஸ்வரூபினியான சிவனுக்கு நமஸ்காரம்.

2.மந்தாகிநீஸலில சந்தனசர்ச்சிதாய
நந்தீச்வரப்ரமத நாதமஹேச்வராய!
மந்தாரமுக்ய பஹுபுஷ்பஸு பூஜிதாய
தஸ்மை மகாராய நம:சிவாய!!
தேவகங்கைத் தண்ணீர் புஷ்பம் இவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், நந்திகேச்வரர், பிரமதர்கள் இவர்களுக்குத் தலைவரும், மந்தாரம் முதலிய பல நல்ல புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும் ஆன அந்த மகாரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

3.சிவாய கௌரீவதனாப்ஜப்ருந்த-
ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய!
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம:சிவாய!!
பார்வதீ முகமாகிய தாமரைக்கொத்துக்கு சூர்யனாயிருப்பவரும், தக்ஷனின் யாகத்தை ஒடுக்கியவரும், நீலகண்டரும், வ்ருஷபக்கொடி கொண்டவரும் ஆன அந்த சிகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

4.வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய-
முனீந்தர தேவார்சித சேகராய!
சந்த்ரார்கவைச்வாநர லோசனாய
தஸ்மை வகாராய நம:சிவாய!!
வசிஷ்டர், அகஸ்த்யர், கௌதமர் போன்ற முனிவர்களும், தேவர்களும் பூஜித்த உச்சியையுடையவரும், சந்திரன், சூர்யன், அக்னி ஆகிய கண்களையுடையவருமாகிய அந்தவகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
5.யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸநாதனாய!
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!
யக்ஷஸ்வரூபியாவும், ஜடைதரித்தராயும், பிநாகவில்லை கையில் கொண்டவரும், பழமையன தேவரும் திகம்பரருமான அந்த யகாரரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் முற்றிற்று.  

No comments:

Post a Comment