இராமேஸ்வரம்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டின் இராமநாதபுரம்
மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள்
ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராமர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின்
மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன்
பெயர் பர்வத வர்த்தினி. மதுரையிலிருந்து
கிழக்கே 161 கி. மீ., தொலைவில்
வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. காசி, ராமேஸ்வரம் யாத்திரை
செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி
தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும்
தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை
தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி
விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம்
செய்யது, காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து
வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.
இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத
வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை
பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய
ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில்
இத்தலம், சேதுபீடம் ஆகும். அம்பிகைக்கு சித்திரைப்
பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம்
செய்கின்றனர். அம்மன் சன்னதி பிரகாரத்தில்
வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது
பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள்
காட்சி தருகிறார்.அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி
மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி
ஆகியோர் உள்ளனர்.முதல் பிரகாரத்தில்
சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு
ராமர் பூஜை செய்யும் சன்னதி
அமைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார்.
யோகக் கலையில் தேர்ச்சி பெறவும்,
நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நாகவடிவில்
உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
இரு லிங்கங்களுக்கு மத்தியில்
சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்க
சன்னதிகள் அமைந்துள்ளது. இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி,
இக்கோயிலின் உலகப் புகழ் பெற்ற
நீண்ட மூன்றாம் பிரகாரத்தை 1740–1770 முடிய உள்ள காலத்தில
கட்டி முடித்தார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம்
690 அடி நீளம், 435 அடி அகலம், 22½ அடி
உயரம் கொண்டதுதென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும்
நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து
தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக்
கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு
வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின்
நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே
224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும்.
மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள்
உள்ளன.
No comments:
Post a Comment