வாரணாசி
கங்கைச் சமவெளியில் அமைந்த வாரணாசி நகரம்
இந்துக்களின் வேதங்கள் மற்றும் வேதாந்தம் ஆகியவற்றுக்கு
11வது நூற்றாண்டு முதல் இருப்பிடமாக அமைந்துள்ளது.[8].
வாரணாசி நகரில் வேதகாலத்திலிருந்து மக்கள்
வேதகாலத்திலிருந்து தொடர்ந்து பல்லாண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதை
வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா மற்றும் ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் கி. மு.,
1800 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்ததை
உறுதிப்படுத்துகின்றனர். கூறுகின்றனர்.
சமண சமயத்தவர்களுக்கும் வாரணாசி நகரம் புனித
இடமாகும். கி. மு., எட்டாம்
நூற்றாண்டில் பிற்ந்த சமண சமய
23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதர் பிறந்த ஊர் வாரணாசியாகும்.மஸ்லின் பருத்தி துணிகள், பட்டுத்
துணிகள், வாசனை திரவியங்கள், யாணையின்
தந்த சிற்பங்கள், சிற்பக்கலை ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற நகராகும்
வாரணாசி.காசி நாட்டின் தலைநகராக விளங்கிய வராணாசியில் கௌதம புத்தர் பல
ஆண்டுகள் கடும் தவமியற்றி, பின்
ஞானம் அடைந்த பின், வாரணாசிக்கு
அருகில் உள்ள சாரநாத்தில் தன்
சீடர்களுக்கு தர்மத்தை போதித்தார்.
கி. மு., 635இல் வாரணாசி
வந்த சீன யாத்திரிகரும் வரலாற்று
அறிஞருமான் யுவான் சுவாங், கங்கைக்
கரையில் 5 கி. மீட்டர் நீளத்தில்
இருந்த வாரணாசியில் செழித்திருந்த சமயம் மற்றும் கலைநயங்கள்
குறித்து பெருமையுடன் தனது பயண நூலில்
குறித்துள்ளார்.
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் வாரணாசியில்
சிவவழிபாட்டை நிலைநாட்டினார். கங்கைச் சமவெளியில் அமைந்த
வாரணாசி நகரம் இந்துக்களின் வேதங்கள்
மற்றும் வேதாந்தம் ஆகியவற்றுக்கு 11வது நூற்றாண்டு முதல்
இருப்பிடமாக அமைந்துள்ளது.வாரணாசி நகரில் வேதகாலத்திலிருந்து
மக்கள் வேதகாலத்திலிருந்து தொடர்ந்து பல்லாண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதை
வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா
மற்றும்
ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் கி. மு.,
1800 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்ததை
உறுதிப்படுத்துகின்றனர். கூறுகின்றனர்.
சமண சமயத்தவர்களுக்கும் வாரணாசி நகரம் புனித
இடமாகும். கி. மு., எட்டாம்
நூற்றாண்டில் பிற்ந்த சமண சமய
23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதர் பிறந்த ஊர் வாரணாசியாகும்.
மஸ்லின் பருத்தி துணிகள், பட்டுத்
துணிகள், வாசனை திரவியங்கள், யாணையின்
தந்த சிற்பங்கள், சிற்பக்கலை ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற நகராகும்
வாரணாசி.
காசி நாட்டின் தலைநகராக விளங்கிய வராணாசியில் கௌதம புத்தர் பல
ஆண்டுகள் கடும் தவமியற்றி, பின்
ஞானம் அடைந்த பின், வாரணாசிக்கு
அருகில் உள்ள சாரநாத்தில் தன்
சீடர்களுக்கு தர்மத்தை போதித்தார்.
கி. மு., 635இல் வாரணாசி
வந்த சீன யாத்திரிகரும் வரலாற்று
அறிஞருமான் யுவான் சுவாங், கங்கைக்
கரையில் 5 கி. மீட்டர் நீளத்தில்
இருந்த வாரணாசியில் செழித்திருந்த சமயம் மற்றும் கலைநயங்கள்
குறித்து பெருமையுடன் தனது பயண நூலில்
குறித்துள்ளார்.
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் வாரணாசியில்
சிவவழிபாட்டை நிலைநாட்டினார்.மகதப் பேரரசு காலத்தில்
வாரணாசி நகரம் தட்சசீலம் மற்றும்
படாலிபுத்திர நகருக்கும் சாலை வழி போக்குவரத்து
இருந்தது.
1194ஆம் ஆண்டில் துருக்கிய இசுலாமிய
ஆட்சியாளரான என்பவரால் வாரணாசி நகரத்திலிருந்த ஆயிரக்கணக்கான
கோயில்களை இடிக்க ஆணையிட்டார். இசுலாமியர்
ஆட்சிக் காலத்தில் வாரணாசி நகரம் மூன்று
நூற்றாண்டுகளாக பொழிவிழந்து காணப்பட்டது. இந்தியாவை ஆப்கானியர்கள் ஊடுருவிய காலத்தில் வாரணாசியில் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் எழுப்பப்பட்டது.
1376இல் பெரோஸ் ஷா என்ற
இசுலாமிய மன்னர் வாரணாசியில் உள்ள
கோயில்களை மீண்டும் இடிக்க ஆணையிட்டார். 1496இல்
ஆப்கானிய ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி வாராணாசியில் உள்ள
இந்துக்களை ஒடுக்கவும், கோயில்களை இடிக்கவும் ஆணையிட்டார். இருப்பினும் வாரணாசி தொடர்ந்து இந்துக்களின்
ஆன்மிகம் மற்றும் கலைகளின் தாயகமாகவே
விளங்கியது.
கபீர்தாசர்மற்றும்
15ஆம் நூற்றாண்டின் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி
சாது ரவி தாஸ் வாரணாசியில்
பிறந்து வளர்ந்தவர்கள். சீக்கிய மத நிறுவனர்
குருநானக் 1507இல் வாரணாசியில் சிவராத்திரி
விழாவினை காண வந்தார். துளசிதாசர்
இங்கு வாழ்ந்தவர்.
மொகலாய மன்னர் அக்பர், வாரணாசியில்
சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு இரண்டு
கோயில்களை எழுப்பினார். புனே மன்னர் அன்னபூரணி
கோயிலையும், அக்பரி பாலத்தையும் கட்டித்தந்தார்.
1656ஆம் ஆண்டில் அவுரங்கசீப் வாரணாசி
காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பல
கோயில்களையும் இடிக்க உத்திரவிட்டார்.[சான்று
தேவை] ஔரங்கசீப், இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும்
கங்கையில் நீராடுவதற்கும் ’ஜிஸியா’
என்ற வரி விதித்தார்.[சான்று
தேவை] ஒளரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு
வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’
வரியை அதிகமாகப் பெறுவதற்காக, கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’
வரி கட்ட வேண்டும் என்று
ஆணையிட்டார்.
ஔரங்கசீப் மறைவிற்குப் பின், வாரணாசியில் காசி,
பூமிகார் மற்றும் மராத்திய மன்னர்கள்,
18ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதிய கோயில்களை கட்டினர்.
[24]. மொகலாயர்கள் 1737முதல் காசி நாட்டை
அலுவலக முறையில் அங்கீகாரம் அளித்தனர். பிரித்தானிய இந்திய அரசும் அவ்வங்கீகாரத்தை
தொடர்ந்து ஏற்றுக் கொண்டது. நகர
வளர்ச்சியின் பொருட்டு 1867இல் வாரணாசி நகராட்சி
மன்றம் துவங்கியது.
இந்திய விடுதலை இயக்கத்திற்கு வித்திட்டவர்களின்
ஒருவரான குவாலியர் அரசின் இராணி இலட்சுமிபாய்
வாரணாசி நகரில் பிறந்தவர்.
தச அஷ்வமேத படித்துறை அருகே
காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்1785இல் இந்தூர் ராணி
அகல்யாபாயினால் புதிதாக கட்டப்பட்டது. இக்கோயிலின்
உயரம் 51 அடியாகும்.1835ஆம் ஆண்டில் சீக்கிய
மன்னர் ரஞ்சித் சிங் கோவில்
கோபுரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்த 1000 கிலோ தங்கத்தினை அளித்திருக்கிறார்.
இங்குள்ள சிவலிங்கம் புகழ் பெற்றது. சிவலிங்கத்திற்கு
காலை, மாலை மற்றும் இரவு
வேளைகளில் பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி
விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறம் அன்னபூர்ணா
கோயில் அமைந்துள்ளது.
சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன்.
அவன் அசுவமேத யாகம் செய்தான்.
இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும்
எனப் பயந்து அசுவமேத யாகக்
குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும்
தவமியற்றி வந்த கபிலர் என்ற
மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத்
துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட
முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது
கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது
பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது
பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம்
செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் கோபப்பார்வையால்
இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய
வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும்
சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால்
எரிந்து போன அவர்களின் சாம்பல்
மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும்
கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே
சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய
முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும்
முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன்
பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள்
முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று
கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான்
தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின்
பூமியில் நதியாக ஓடச் செய்தார்.
இவ்வாறு ஓடிய கங்கை நதியில்
பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி
பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை
முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே
காசியின் சிறப்பு ஆகும்.
No comments:
Post a Comment