Friday, April 8, 2016

திருமழிசை சிவவாக்கிய சித்தர்


பெண்ணே! இந்த மணலையும், கசப்புமிக்க இந்த சுரைக்காயை கசப்பு நீக்கி ருசியாகவும் சமைத்து தர உன்னால் முடியுமா? சிவவாக்கியர், அந்த குறவர் குலப்பெண்ணிடம் கேட்டார். அவள் பதிலேதும் பேசவில்லை. அவர் கொடுத்ததை பயபக்தியுடன் கைநீட்டி வாங்கினாள். அடுப்பு பற்ற வைத்தாள். மணலை அரிசி களைவது போல களைந்தாள். மண் பானையில் போட்டாள். குறிப்பிட்ட நேரத்திலேயே அது சாதமாகி விட்டது. அடுத்து சுரைக்காயை சமைத்தாள். கறி மிக ருசியாக இருந்தது. கசப்புத்தன்மை அறவே இல்லை. பெரியவர்கள் எதையாவது சொன்னால், ஏன் ஏதென்று கேட்காமல் செய்வது அக்காலத்தில் சிறியவர்களின் வழக்கமாக இருந்தது. அதிலும், இவரோ தவசிரேஷ்டர் போல இருக்கிறார். இளவயது வேறு. முகத்தில் தேஜஸ் ஜொலிக்கிறது. இந்த சிவவாக்கிய சித்தர் பிறந்த இடம் பற்றிய தகவல் இல்லை என்றாலும், இவர் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பது மட்டும் சில நூல்களில் இருந்து தெரிய வருகிறது. பிறக்கும் போதே குழந்தை சிவவாக்கியர் சிவசிவ என்று சொன்னாராம். சிவன் என்ற வாக்கியத்தைச் சொன்னதால் சிவவாக்கியர் என்று இவரது பெற்றோர் பெயர் வைத்து விட்டனர். சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், சிவபெருமானை நமசிவாய என்று சொல்லி வழிபடுபவர்களின் உயிர் பிரிந்து விட்டால் கூட மீண்டும் உயிர் பிழைத்து விடுவார் என்ற அடிப்படையில் ஒரு பாடல் பாடியுள்ளார். சிவபித்தரான இவர், சித்தர்களைப் பற்றி அறிந்தார். யாராவது ஒரு சித்தரை தனது குருவாக அடைய வேண்டும் எனக்கருதி காசிக்கு சென்று விட்டார். அங்கே ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அந்த சித்தர் காசிக்கு வரும் பக்தர்களின் காலணி பழுதாகி விட்டால், அதை சரி செய்து கொடுப்பார். சிலருக்கு, அவர்களது காலின் அளவைப் பார்த்தே காலணி செய்து கொடுத்து விடுவார். அந்தளவுக்கு தொழிலில் திறமைசாலி. காலணி செய்யும் தொழில் செய்தாலும், பிராணாயமம், தியானம், யோகா என அவருக்குத் தெரியாத வித்தைகள் இல்லை. அவர் தியானத்தில் ஆழ்ந்து போனால், அவராக எழுந்தால் தான் உண்டு.
யாராலும் அவ்வளவு எளிதில் அவரை எழுப்ப முடியாது. தியானத்தில் திறமைசாலி என காசி மக்களிடையே அவருக்கு பெயர் இருந்தாலும், அவர் செய்யும் தொழிலால் பெரும்பாலோர் அவருக்கு மரியாதை செய்வதில்லை. ஒரு சிலர் அவரைக் கடவுள் போல நினைத்து ஆசி பெற்றுச் செல்வார்கள். அவரைப் பற்றி கேள்விப்பட்டார் சிவவாக்கியர். அவரிடம் சென்று, குருவே! தங்கள் மாணவன் வந்திருக்கிறேன், தங்களுக்கு பணிவிடை செய்வதில் எனக்கு ஆனந்தம். தங்கள் மூலமாக இறைவனைக் காண விரும்புகிறேன், என்றார். சிவவாக்கியரை சித்தர் ஒரு பலகையில் அமரச்சொன்னார். அவ்வளவுதான்! பலகை பறக்கத் தொடங்கி விட்டது. ஏதோ ஒரு பரவசம் சிவவாக்கியரை ஆட்கொண்டது. உயர உயரப் பறந்தார். வானமண்டலத்தை அடைந்து விட்டது போல் ஒரு உணர்வு. அங்கே தான் தெய்வங்கள் இருக்கும் என்பார்களே! தெய்வங் களைப் பார்க்க வேண்டும் என்று சித்தரிடம் ஒரு வார்த்தை தானே சொன்னோம். அவர் தேவலோகத் திற்கே கூட்டி வந்து விட்டாரே! நட்சத்திர மண்டலங்களின் மத்தியில் மிதந்தார் சிவவாக்கியர். தெய்வங்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என ஆராய்ந்தார். சற்று நேரமானது. கடவுளைக் காண்பதற்குள்ளாகவே பலகை வேகமாக கீழ் நோக்கி இறங்கியது. சிவவாக்கியரின் உடல் நடுங்கியது. கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் வேறு. அந்த உணர்வு திடீரென நின்றது. சிவவாக்கியர் கண் திறந்தார். இப்போது உடலில் பரவசநிலையும் இல்லை. பலகை மேலே பறக்கவுமில்லை. இருந்த இடத்தில் அப்படியே இருந்தார். நான் நிஜமாகவே வானமண்டலத்திற்கு பறந்தேனா சுவாமி? என்றார். இல்லையே! நீ வந்ததில் இருந்தே என் முன்னால் தான் இருக்கிறாய்? என்ற சித்தர், சிவவாக்கியா! நீ கடவுளைக் காண ஆசைப்படுகிறாய். அது எளிதான காரியமல்ல. அதே நேரம், இப்போது பலகையில் பறப்பது போல உணர்ந்தாயே! அந்த உணர்வு நிரந்தரமாக உடலில் தங்கினால் நீ கடவுளை  காணலாம்.
 அதே நேரம் உனக்கு அதற்குரிய பக்குவம் வரவில்லை. நான் ஒரு பரிட்சை வைக்கிறேன். இந்த தேர்வில் தேறினால், நீ கடவுளைப் பார்த்து விடலாம், என்றார்.என்ன தேர்வு? என ஆவலுடன் சிவவாக்கியர் கேட்க, கங்கைக்குச் செல்.செருப்பு தயாரித்து இங்கே நான் சேர்த்து வைத்துள்ள இந்தக் காசை வாங்கிச்செல். என் குருநாதரின் காணிக்கை இது, என அவளிடம் சொல். அவள் வாங்கிக்கொள்வாள், வரும் போது இந்த தோல்பையில் கங்காதீர்த்தம் கொண்டு வா, என்று சொல்லி அனுப்பி வைத்தார். சிவவாக்கியரும் கங்கையிடம் சென்று, தாயே! என் குருநாதரின் இந்த காணிக்கையை ஏற்றுக்கொள், என்றார்.கங்கைக்குள் இருந்து இரண்டு வளையல் அணிந்த கரங்கள் வெளிப்பட்டன. சிவவாக்கியர் காசை அந்தக் கைகளில் வைத்தார். அதை வாங்கியதும் கைகள் தண்ணீருக்குள் போய் விட்டன. தோல்பையில் தண்ணீரை முகர்ந்து வந்த சிவவாக்கியரிடம் சித்தர், சிவவாக்கியா! நீ இந்த பையிலுள்ள கங்காதீர்த்தத்திடம், நான் கொடுத்த காசை திருப்பிக் கேள். அவள் தந்ததும் வாங்கிக் கொள், என்றார். சிவவாக்கியர் ஏன் எதற்கென்று குருவிடம் கேட்காமல், அவர் சொன்னது போலவே காசைக் கேட்டார். தோல் பைக்குள் உள்ள தீர்த்தத்தில் இருந்து எழுந்த கைகள் பெற்ற பணத்தை அப்படியே தந்து விட்டன. காசைக் கொடுக்கும் போதும், பெறும்போதும் சிவவாக்கியரின் மனதில் சிறு சலனம் ஏற்பட்டதை சித்தர் கவனித்து விட்டார். சிவவாக்கியா! அந்தக் கைகளை ஏன் அப்படியொரு பார்வை பார்த்தாய்? உனக்கு பெண்ணாசை இருக்கிறது. அதனால் தான் அந்தக் கைகளை அப்படி ரசித்தாய்! நான் சொல்வது சரிதானே! என்றதும், சிவவாக்கியருக்கு தூக்கி வாரிப்போட்டது.
அவர் தலை குனிந்து நின்றார்.சித்தர் அவரிடம், சிவவாக்கியா! உனக்கு இல்லறத்தில் நாட்டமிருக்கிறது. அது ஒன்றும் தவறல்ல. நீ திருமணம் செய்து கொள், எனச் சொல்லி அனுப்பிவிட்டார். குரு இப்படி சொல்லிவிட்டாரே என வருந்தினாலும், அவரது கட்டளையை ஏற்ற சிவவாக்கியர் திருமணமும் செய்து கொண்டார். 
ஆனாலும், தவ வாழ்வையே தொடர்ந்தார். தன் குலத்தொழிலான குறவர்கள் செய்யும் பல்வேறு பணிகளைச் செய்து, அதில் கிடைத்த குறைந்த வருமானத்தில், நிறைவான வாழ்வு நடத்தினார்.  ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளையும் வெற்றி பெறச் செய்யும் பின்னணியில், அவனது மனைவியின் செயல்பாடே முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வகையில், சிவவாக்கியரின் மனைவியும் கணவரின் தவ வாழ்வுக்கு உற்ற துணையாக விளங்கினார்.பொதுவாக பெண்கள் பொன் நகைக்கு ஆசைப்படுவார்கள். சிவவாக்கியரின் மனைவி என்ன செய்தார் என கேளுங்கள். ஒருமுறை, சிவவாக்கியர் மூங்கில் காட்டுக்கு கம்பு ஒடிக்கச் சென்றார். அவர் கம்பை அறுக்கும் வேளையில், அந்த மரத்தில் இருந்து பொன் துகள்கள் சிந்தின. சிவவாக்கியர் அதிர்ந்து விட்டார். இதென்ன கொடுமை! நாமோ தவம் செய்து, இறையடியை நிரந்தரமாக அடைய விரும்புகிறோம். இங்கோ பொன் கொட்டுகிறது. இதைக் கொண்டு ஆனந்தமாக வாழலாம் என்று நினைப்பவர்களே உலகத்தில் அதிகம். நான் அந்த ரகமில்லையே, என் முன்னால் பொன் துகளைக் கொட்ட வைத்து, என்னை இறைவன் ஆசைப்படுகுழியில் தள்ளப் பார்க்கிறானே. பொன்னாசை மரண குழியின் வாசலாயிற்றே என்று நினைத்தவர், அங்கிருந்து சற்று தள்ளி நின்று கொண்டார். அப்போது, நான்கு பேர் அங்கே வந்தனர். அவர்கள் அங்கு சிந்திய பொன்குவியலைப் பார்த்தனர். பொன்னைப் பார்த்தால் விடுவார்களா? ஐயா! அங்கே பொன் துகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதை நாம் ஐந்து பேரும் பங்கிட்டுக் கொள்வோமே! என்றதும், வேண்டாம்... வேண்டாம்... உங்களுக்கும் அது வேண் டாம், எனக்கும் வேண்டாம். இது ஆளைக் கொன்று விடும் விஷத்திற்கு சமமானது, என்று அறிவுரை சொன்னார் சிவவாக்கியர்.அட பைத்தியமே! உனக்கு வேண்டாம் என்றால் ஓடிப்போ. எங்களை வாழவிடாமல் செய்வதில் உனக்கென்ன ஆனந்தம்! என்று கடிந்து கொண்டனர் அந்த நால்வரும்.
சிவவாக்கியர் வருத்தப்பட்டார்.இந்த உலகம் ஆசையில் இருந்து என்றுதான் மீளப்போகிறதோ? சித்தர்கள் இரும்பையும், தகரத்தையும் பொன்னாக்கும் ரசவாத வித்தையை படித்தது வறுமையைப் போக்குவதற்காக அல்ல! தங்கத்தை மக்கள் மத்தியில் காட்டி, அவர்கள் அதை வெறுத்து ஒதுக்கும் காட்சி கண்டு மனம் மகிழ்ந்து, அவர்களை ஆன்மிகப்பாதையில் திருப்பி விடுவதற்காகவே! தங்கத்தை வெறுக்கும் மனப்பக்குவத்தை எவன் பெறுகிறானோ, அவனே ஆன்மிக வாழ்வுக்கு தகுதியுடையவன் ஆகிறான். இவர்களைப் போல் மக்கள் இருப்பதால் தானே சித்தர்கள் யார் கண்ணிலும் படாமல் வாழ்கிறார்கள்! இந்த மக்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்கிறார்களே! ஆனால், உலக நடப்பைப் பார்த்தால் அவர்கள் எப்போது தான் வெளிப்படுவார்களோ! உலகம் திருந்தும் நாள் எப்போது? என்று வேதனையும் அடைந்தார். பின்னர் அங்கிருந்து போய்விட்டார்.தங்கத்தை மூடை மூடையாக கட்டிய நால்வருக்கும் பசி ஏற்பட்டது. இருவர் தங்கமூடைகளை பார்த்துக் கொள்வதென்றும், இருவர் ஊருக்குள் சென்று உணவு கொண்டு வருவதென்றும் முடிவாயிற்று. அதன்படி உணவு கொண்டு வரச்சென்றவர்கள் சாப்பிட்டு விட்டு, இரண்டு பொட்டலம் உணவை எடுத்து வந்தனர். வரும் வழியில் இருவரும், ஏய்! நாம் இருவரும் ஆளுக்குப் பாதியாக தங்கத்தைப் பங்கு போட்டுக் கொள்வோம். அவர்களுக்கு இந்த உணவில் விஷம் கலந்து கொடுத்து விடுவோம், என்று திட்டமிட்டனர். உணவில் விஷம் கலக்கப் பட்டது. அங்கேயும் இதே போல் ஒரு சதித்திட்டம் உருவானது. உணவு கொண்டு வருபவர்களை தண்ணீர் எடுத்து வரச்சொல்லி அந்த கிணற்றுப் பக்கம் போகச் சொல்வோம். அவர்கள் குனிந்து தண்ணீர் இறைக்கும்போது, உள்ளே தள்ளி விட்டு விடலாம். நாம் இருவரும் தங்கத்தைப் பங்கிட்டுக் கொள்வோம் என்று முடிவெடுத்தனர். இருதரப்பு முடிவும் வெற்றிகரமாக நிறைவேறியது. திட்டமிட்டபடியே, இருவரையும் கிணற்றுக்குள் தள்ளி வெளியே நின்றவர்கள் கொலை செய்தனர். அவர்கள் விஷ உணவைச் சாப்பிட்டு உயிரை விட்டனர்.
மறுநாள் அங்கு வந்த சிவவாக்கியர் அதைக்கண்டு வருத்தப்பட்டார்.ஆளைக் கொல்லும் விஷம் இந்த தங்கம் என்று சொன்னேனே! நால்வரும் கேட்காமல் தங்கள் அரிய உயிரை விட்டார்களே! என்று மனதுக்குள் அழுதார்.ஒருநாள், சிவவாக்கியரின் வீட்டுக்கு கொங்கணச்சித்தர் வந்தார். அப்போது வாக்கியர் வீட்டில் இல்லை. அவரது இல்லத்தரசி கொங்கணரை வரவேற்று உபசரித்தாள். அவர், சில இரும்புத் துண்டுகளை கொண்டு வரச் சொல்லி அவற்றைத் தங்கமாக மாற்றி அவளிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். சிவவாக்கியர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி நடந்ததைச் சொல்லி தங்கத்தை கணவரிடம் கொடுத்தார். அதைத் தொடவும் விரும்பாத சிவவாக்கியர், மனைவியிடம், இது உன்னையும், என்னையும் கொன்றுவிடும் விஷம், இதை கிணற்றில் வீசிவிடு, என்றார்.அந்த கற்புடைய நங்கையும் கணவர் சொல்லுக்கு மறுசொல் பேசாமல், அவ்வாறே செய்து விட்டார். சிவவாக்கியர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
செல்வத்தால் நன்மையை விட சீரழிவே அதிகம் என்பதை வலியுறுத்தி சில நூல்களையும் அவர் எதிர்கால தலைமுறைக்காக எழுதினார். பற்றற்று இல்லறம் நடத்திய அவர், கும்பகோணம் ÷க்ஷத்ரத்துக்கு ஒருமுறை வந்தார். அங்கேயே அவர் சமாதியாகி விட்டார்.சிவவாக்கியரின் வரலாறை படித்த நாம், செல்வத்தை வெறுக்கும் பக்குவத்தைப் பெறுவோம். வரதட்சணையாக தங்கத்தைப் பெறும் பேராசையை ஒதுக்கித்தள்ளி, உழைத்து வாழ முடிவெடுப்போம்.
பெண்ணே! இந்த மணலையும், கசப்புமிக்க இந்த சுரைக்காயை கசப்பு நீக்கி ருசியாகவும் சமைத்து தர உன்னால் முடியுமா? சிவவாக்கியர், அந்த குறவர் குலப்பெண்ணிடம் கேட்டார். அவள் பதிலேதும் பேசவில்லை. அவர் கொடுத்ததை பயபக்தியுடன் கைநீட்டி வாங்கினாள். அடுப்பு பற்ற வைத்தாள். மணலை அரிசி களைவது போல களைந்தாள். மண் பானையில் போட்டாள். குறிப்பிட்ட நேரத்திலேயே அது சாதமாகி விட்டது. அடுத்து சுரைக்காயை சமைத்தாள். கறி மிக ருசியாக இருந்தது. கசப்புத்தன்மை அறவே இல்லை. பெரியவர்கள் எதையாவது சொன்னால், ஏன் ஏதென்று கேட்காமல் செய்வது அக்காலத்தில் சிறியவர்களின் வழக்கமாக இருந்தது. அதிலும், இவரோ தவசிரேஷ்டர் போல இருக்கிறார். இளவயது வேறு. முகத்தில் தேஜஸ் ஜொலிக்கிறது. இந்த சிவவாக்கிய சித்தர் பிறந்த இடம் பற்றிய தகவல் இல்லை என்றாலும், இவர் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பது மட்டும் சில நூல்களில் இருந்து தெரிய வருகிறது. பிறக்கும் போதே குழந்தை சிவவாக்கியர் சிவசிவ என்று சொன்னாராம். சிவன் என்ற வாக்கியத்தைச் சொன்னதால் சிவவாக்கியர் என்று இவரது பெற்றோர் பெயர் வைத்து விட்டனர். சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், சிவபெருமானை நமசிவாய என்று சொல்லி வழிபடுபவர்களின் உயிர் பிரிந்து விட்டால் கூட மீண்டும் உயிர் பிழைத்து விடுவார் என்ற அடிப்படையில் ஒரு பாடல் பாடியுள்ளார். சிவபித்தரான இவர், சித்தர்களைப் பற்றி அறிந்தார். யாராவது ஒரு சித்தரை தனது குருவாக அடைய வேண்டும் எனக்கருதி காசிக்கு சென்று விட்டார். அங்கே ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அந்த சித்தர் காசிக்கு வரும் பக்தர்களின் காலணி பழுதாகி விட்டால், அதை சரி செய்து கொடுப்பார். சிலருக்கு, அவர்களது காலின் அளவைப் பார்த்தே காலணி செய்து கொடுத்து விடுவார். அந்தளவுக்கு தொழிலில் திறமைசாலி. காலணி செய்யும் தொழில் செய்தாலும், பிராணாயமம், தியானம், யோகா என அவருக்குத் தெரியாத வித்தைகள் இல்லை. அவர் தியானத்தில் ஆழ்ந்து போனால், அவராக எழுந்தால் தான் உண்டு.
யாராலும் அவ்வளவு எளிதில் அவரை எழுப்ப முடியாது. தியானத்தில் திறமைசாலி என காசி மக்களிடையே அவருக்கு பெயர் இருந்தாலும், அவர் செய்யும் தொழிலால் பெரும்பாலோர் அவருக்கு மரியாதை செய்வதில்லை. ஒரு சிலர் அவரைக் கடவுள் போல நினைத்து ஆசி பெற்றுச் செல்வார்கள். அவரைப் பற்றி கேள்விப்பட்டார் சிவவாக்கியர். அவரிடம் சென்று, குருவே! தங்கள் மாணவன் வந்திருக்கிறேன், தங்களுக்கு பணிவிடை செய்வதில் எனக்கு ஆனந்தம். தங்கள் மூலமாக இறைவனைக் காண விரும்புகிறேன், என்றார். சிவவாக்கியரை சித்தர் ஒரு பலகையில் அமரச்சொன்னார். அவ்வளவுதான்! பலகை பறக்கத் தொடங்கி விட்டது. ஏதோ ஒரு பரவசம் சிவவாக்கியரை ஆட்கொண்டது. உயர உயரப் பறந்தார். வானமண்டலத்தை அடைந்து விட்டது போல் ஒரு உணர்வு. அங்கே தான் தெய்வங்கள் இருக்கும் என்பார்களே! தெய்வங் களைப் பார்க்க வேண்டும் என்று சித்தரிடம் ஒரு வார்த்தை தானே சொன்னோம். அவர் தேவலோகத் திற்கே கூட்டி வந்து விட்டாரே! நட்சத்திர மண்டலங்களின் மத்தியில் மிதந்தார் சிவவாக்கியர். தெய்வங்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என ஆராய்ந்தார். சற்று நேரமானது. கடவுளைக் காண்பதற்குள்ளாகவே பலகை வேகமாக கீழ் நோக்கி இறங்கியது. சிவவாக்கியரின் உடல் நடுங்கியது. கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் வேறு. அந்த உணர்வு திடீரென நின்றது. சிவவாக்கியர் கண் திறந்தார். இப்போது உடலில் பரவசநிலையும் இல்லை. பலகை மேலே பறக்கவுமில்லை. இருந்த இடத்தில் அப்படியே இருந்தார். நான் நிஜமாகவே வானமண்டலத்திற்கு பறந்தேனா சுவாமி? என்றார். இல்லையே! நீ வந்ததில் இருந்தே என் முன்னால் தான் இருக்கிறாய்? என்ற சித்தர், சிவவாக்கியா! நீ கடவுளைக் காண ஆசைப்படுகிறாய். அது எளிதான காரியமல்ல. அதே நேரம், இப்போது பலகையில் பறப்பது போல உணர்ந்தாயே! அந்த உணர்வு நிரந்தரமாக உடலில் தங்கினால் நீ கடவுளை  காணலாம்.
 அதே நேரம் உனக்கு அதற்குரிய பக்குவம் வரவில்லை. நான் ஒரு பரிட்சை வைக்கிறேன். இந்த தேர்வில் தேறினால், நீ கடவுளைப் பார்த்து விடலாம், என்றார்.என்ன தேர்வு? என ஆவலுடன் சிவவாக்கியர் கேட்க, கங்கைக்குச் செல்.செருப்பு தயாரித்து இங்கே நான் சேர்த்து வைத்துள்ள இந்தக் காசை வாங்கிச்செல். என் குருநாதரின் காணிக்கை இது, என அவளிடம் சொல். அவள் வாங்கிக்கொள்வாள், வரும் போது இந்த தோல்பையில் கங்காதீர்த்தம் கொண்டு வா, என்று சொல்லி அனுப்பி வைத்தார். சிவவாக்கியரும் கங்கையிடம் சென்று, தாயே! என் குருநாதரின் இந்த காணிக்கையை ஏற்றுக்கொள், என்றார்.கங்கைக்குள் இருந்து இரண்டு வளையல் அணிந்த கரங்கள் வெளிப்பட்டன. சிவவாக்கியர் காசை அந்தக் கைகளில் வைத்தார். அதை வாங்கியதும் கைகள் தண்ணீருக்குள் போய் விட்டன. தோல்பையில் தண்ணீரை முகர்ந்து வந்த சிவவாக்கியரிடம் சித்தர், சிவவாக்கியா! நீ இந்த பையிலுள்ள கங்காதீர்த்தத்திடம், நான் கொடுத்த காசை திருப்பிக் கேள். அவள் தந்ததும் வாங்கிக் கொள், என்றார். சிவவாக்கியர் ஏன் எதற்கென்று குருவிடம் கேட்காமல், அவர் சொன்னது போலவே காசைக் கேட்டார். தோல் பைக்குள் உள்ள தீர்த்தத்தில் இருந்து எழுந்த கைகள் பெற்ற பணத்தை அப்படியே தந்து விட்டன. காசைக் கொடுக்கும் போதும், பெறும்போதும் சிவவாக்கியரின் மனதில் சிறு சலனம் ஏற்பட்டதை சித்தர் கவனித்து விட்டார். சிவவாக்கியா! அந்தக் கைகளை ஏன் அப்படியொரு பார்வை பார்த்தாய்? உனக்கு பெண்ணாசை இருக்கிறது. அதனால் தான் அந்தக் கைகளை அப்படி ரசித்தாய்! நான் சொல்வது சரிதானே! என்றதும், சிவவாக்கியருக்கு தூக்கி வாரிப்போட்டது.
அவர் தலை குனிந்து நின்றார்.சித்தர் அவரிடம், சிவவாக்கியா! உனக்கு இல்லறத்தில் நாட்டமிருக்கிறது. அது ஒன்றும் தவறல்ல. நீ திருமணம் செய்து கொள், எனச் சொல்லி அனுப்பிவிட்டார். குரு இப்படி சொல்லிவிட்டாரே என வருந்தினாலும், அவரது கட்டளையை ஏற்ற சிவவாக்கியர் திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், தவ வாழ்வையே தொடர்ந்தார். தன் குலத்தொழிலான குறவர்கள் செய்யும் பல்வேறு பணிகளைச் செய்து, அதில் கிடைத்த குறைந்த வருமானத்தில், நிறைவான வாழ்வு நடத்தினார்.  ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளையும் வெற்றி பெறச் செய்யும் பின்னணியில், அவனது மனைவியின் செயல்பாடே முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வகையில், சிவவாக்கியரின் மனைவியும் கணவரின் தவ வாழ்வுக்கு உற்ற துணையாக விளங்கினார்.பொதுவாக பெண்கள் பொன் நகைக்கு ஆசைப்படுவார்கள். சிவவாக்கியரின் மனைவி என்ன செய்தார் என கேளுங்கள். ஒருமுறை, சிவவாக்கியர் மூங்கில் காட்டுக்கு கம்பு ஒடிக்கச் சென்றார். அவர் கம்பை அறுக்கும் வேளையில், அந்த மரத்தில் இருந்து பொன் துகள்கள் சிந்தின. சிவவாக்கியர் அதிர்ந்து விட்டார். இதென்ன கொடுமை! நாமோ தவம் செய்து, இறையடியை நிரந்தரமாக அடைய விரும்புகிறோம். இங்கோ பொன் கொட்டுகிறது. இதைக் கொண்டு ஆனந்தமாக வாழலாம் என்று நினைப்பவர்களே உலகத்தில் அதிகம். நான் அந்த ரகமில்லையே, என் முன்னால் பொன் துகளைக் கொட்ட வைத்து, என்னை இறைவன் ஆசைப்படுகுழியில் தள்ளப் பார்க்கிறானே. பொன்னாசை மரண குழியின் வாசலாயிற்றே என்று நினைத்தவர், அங்கிருந்து சற்று தள்ளி நின்று கொண்டார். அப்போது, நான்கு பேர் அங்கே வந்தனர். அவர்கள் அங்கு சிந்திய பொன்குவியலைப் பார்த்தனர். பொன்னைப் பார்த்தால் விடுவார்களா? ஐயா! அங்கே பொன் துகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதை நாம் ஐந்து பேரும் பங்கிட்டுக் கொள்வோமே! என்றதும், வேண்டாம்... வேண்டாம்... உங்களுக்கும் அது வேண் டாம், எனக்கும் வேண்டாம். இது ஆளைக் கொன்று விடும் விஷத்திற்கு சமமானது, என்று அறிவுரை சொன்னார் சிவவாக்கியர்.அட பைத்தியமே! உனக்கு வேண்டாம் என்றால் ஓடிப்போ. எங்களை வாழவிடாமல் செய்வதில் உனக்கென்ன ஆனந்தம்! என்று கடிந்து கொண்டனர் அந்த நால்வரும்.
சிவவாக்கியர் வருத்தப்பட்டார்.இந்த உலகம் ஆசையில் இருந்து என்றுதான் மீளப்போகிறதோ? சித்தர்கள் இரும்பையும், தகரத்தையும் பொன்னாக்கும் ரசவாத வித்தையை படித்தது வறுமையைப் போக்குவதற்காக அல்ல! தங்கத்தை மக்கள் மத்தியில் காட்டி, அவர்கள் அதை வெறுத்து ஒதுக்கும் காட்சி கண்டு மனம் மகிழ்ந்து, அவர்களை ஆன்மிகப்பாதையில் திருப்பி விடுவதற்காகவே! தங்கத்தை வெறுக்கும் மனப்பக்குவத்தை எவன் பெறுகிறானோ, அவனே ஆன்மிக வாழ்வுக்கு தகுதியுடையவன் ஆகிறான். இவர்களைப் போல் மக்கள் இருப்பதால் தானே சித்தர்கள் யார் கண்ணிலும் படாமல் வாழ்கிறார்கள்! இந்த மக்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்கிறார்களே! ஆனால், உலக நடப்பைப் பார்த்தால் அவர்கள் எப்போது தான் வெளிப்படுவார்களோ! உலகம் திருந்தும் நாள் எப்போது? என்று வேதனையும் அடைந்தார். பின்னர் அங்கிருந்து போய்விட்டார்.தங்கத்தை மூடை மூடையாக கட்டிய நால்வருக்கும் பசி ஏற்பட்டது. இருவர் தங்கமூடைகளை பார்த்துக் கொள்வதென்றும், இருவர் ஊருக்குள் சென்று உணவு கொண்டு வருவதென்றும் முடிவாயிற்று. அதன்படி உணவு கொண்டு வரச்சென்றவர்கள் சாப்பிட்டு விட்டு, இரண்டு பொட்டலம் உணவை எடுத்து வந்தனர். வரும் வழியில் இருவரும், ஏய்! நாம் இருவரும் ஆளுக்குப் பாதியாக தங்கத்தைப் பங்கு போட்டுக் கொள்வோம். அவர்களுக்கு இந்த உணவில் விஷம் கலந்து கொடுத்து விடுவோம், என்று திட்டமிட்டனர். உணவில் விஷம் கலக்கப் பட்டது. அங்கேயும் இதே போல் ஒரு சதித்திட்டம் உருவானது. உணவு கொண்டு வருபவர்களை தண்ணீர் எடுத்து வரச்சொல்லி அந்த கிணற்றுப் பக்கம் போகச் சொல்வோம். அவர்கள் குனிந்து தண்ணீர் இறைக்கும்போது, உள்ளே தள்ளி விட்டு விடலாம். நாம் இருவரும் தங்கத்தைப் பங்கிட்டுக் கொள்வோம் என்று முடிவெடுத்தனர். இருதரப்பு முடிவும் வெற்றிகரமாக நிறைவேறியது. திட்டமிட்டபடியே, இருவரையும் கிணற்றுக்குள் தள்ளி வெளியே நின்றவர்கள் கொலை செய்தனர். அவர்கள் விஷ உணவைச் சாப்பிட்டு உயிரை விட்டனர்.
மறுநாள் அங்கு வந்த சிவவாக்கியர் அதைக்கண்டு வருத்தப்பட்டார்.ஆளைக் கொல்லும் விஷம் இந்த தங்கம் என்று சொன்னேனே! நால்வரும் கேட்காமல் தங்கள் அரிய உயிரை விட்டார்களே! என்று மனதுக்குள் அழுதார்.ஒருநாள், சிவவாக்கியரின் வீட்டுக்கு கொங்கணச்சித்தர் வந்தார். அப்போது வாக்கியர் வீட்டில் இல்லை. அவரது இல்லத்தரசி கொங்கணரை வரவேற்று உபசரித்தாள். அவர், சில இரும்புத் துண்டுகளை கொண்டு வரச் சொல்லி அவற்றைத் தங்கமாக மாற்றி அவளிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். சிவவாக்கியர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி நடந்ததைச் சொல்லி தங்கத்தை கணவரிடம் கொடுத்தார். அதைத் தொடவும் விரும்பாத சிவவாக்கியர், மனைவியிடம், இது உன்னையும், என்னையும் கொன்றுவிடும் விஷம், இதை கிணற்றில் வீசிவிடு, என்றார்.அந்த கற்புடைய நங்கையும் கணவர் சொல்லுக்கு மறுசொல் பேசாமல், அவ்வாறே செய்து விட்டார். சிவவாக்கியர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

செல்வத்தால் நன்மையை விட சீரழிவே அதிகம் என்பதை வலியுறுத்தி சில நூல்களையும் அவர் எதிர்கால தலைமுறைக்காக எழுதினார். பற்றற்று இல்லறம் நடத்திய அவர், கும்பகோணம் ÷க்ஷத்ரத்துக்கு ஒருமுறை வந்தார். அங்கேயே அவர் சமாதியாகி விட்டார்.சிவவாக்கியரின் வரலாறை படித்த நாம், செல்வத்தை வெறுக்கும் பக்குவத்தைப் பெறுவோம். வரதட்சணையாக தங்கத்தைப் பெறும் பேராசையை ஒதுக்கித்தள்ளி, உழைத்து வாழ முடிவெடுப்போம்.


சிவம் என்றால் என்ன என்று உணர்ந்தவர்  சிவவாக்கியர் தான் உணர்ந்த சிவத்தை எழுத்தாக்கி வார்த்தையாக்கி வாக்கியமாக்கி அனைவரும் சிவம் என்பதின் உண்மைப் பொருளை  உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற  உயரிய நோக்கில் பாடலாக்கியவர்  சிவவாக்கியர்

சமுதாயத்தில் நிலவிவரும் தவறான கடவுள் கொள்கைகளை பின்பற்றுபவர்களை சமுதாயத்தில் நிலவிவரும் தவறான நடவடிக்கைகளை  தவறு என்று தைரியமாக சுட்டி காட்டி சிவத்தின் உண்மைப் பொருளை இந்த உலகத்திற்குச் சுட்டிக் காட்ட வாக்கியத்தில் எழுதிவைத்ததால் இவர் சிவவாக்கியர்

இவருடைய பாடலில் சில வரிகளில் ராம நாம என்ற வார்த்தை வருவதால் இந்த பாடல் இவர்  எழுதவில்லை என்கின்றனர் சிலர்
இப்பாடல்கள் வைஷ்ணவர்  காலத்தில் எழுதப்பட்டது என்கின்றனர்  சிலர்
எது எப்படி இருந்தாலும் இப்பாடல்களின் அர்த்தத்தை நாம் இப்பொழுது பார்ப்போம்



“””””””அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
    எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே”””””””
                                                                           --------சிவவாக்கியர்-------------
“””””””அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் “””””””
அந்தி - பகல் பொழுது முடியும் நேரம் - அதாவது அந்தி மயங்கி இருட்டத் தொடங்கியது என்று பொருள்
மாலை - பிற்பகலுக்கு பின்னர்  சூரியன் மறையும் வரை உள்ள நேரம் - சாயங்காலம்
உச்சி - பகல் பன்னிரண்டு மணி

இந்த மூன்று வேளைகளிலும் உடலைத் துhய்மைப்படுத்துகிறோம் உடலைத் துhய்மைப்படுத்தி புற வழிபாடு செய்வதால் என்ன பயன் இருக்கிறது ஒரு பயனும் இல்லை
அக வழிபாட்டின் மூலம் பெறப்படும் பயன்களை அடுத்த அடிகளில் குறிப்பிடுகிறார்



””””””சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்”””””””””””””””
சந்தி
பகலும் இரவும் சந்திக்கும் நேரம்-சந்தி எனப்படுகிறது
இதைப் பகலும், இரவும் பிரியும் நேரம் என்றும் சொல்லலாம்
இந்த சந்தி ஒரு நாளில் இரண்டு முறை நடைபெறுகிறது இரண்டு பெயர்களால் அழைக்கப்படுகிறது
இரவும் பகலும் சந்திக்கும் நேரம் - விடியல் என்றும்
பகலும் இரவும் சந்திக்கும் நேரம் - மாலைப் பொழுது என்றும் கூறப்படுகிறது

இறந்தவரை நினைத்துக் காலையில் ஒப்பாரி  வைப்பதைச் சந்தி அழுகை என்பார்கள்
அதாவது சந்தியில் ஜபம்
சந்தி வேளையில் செய்யப்படும் தர்ப்பணங்கள் தபங்கள் செபங்கள் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய செய்யப்படுபவை

சந்தி வேளையில் செய்தால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையுமா என்ன முறையைக் கையாண்டால் இறந்த ஆத்மா சாந்தி அடையும் என்பதைப பற்றிப்  பார்ப்போம்

இரவு பகல் என்றால்
இரவுக்கு அதிபதி நிலா - அதை இடது நாடி இடகலை என்றும,
பகலுக்கு அதிபதி அதாவது பகலை ஆள்வது சூரியன் - வலது நாடி - பிங்கலை என்றும்
இந்த இரண்டு நாடிகளும் சந்திக்கும் இடம் நெற்றிக் கண் அங்கே பார்த்தால் அருள் இருக்கும்

இந்த இடத்தில் வைத்து இறந்தவர்களை நினைத்து தபங்கள் தர்ப்பணங்கள் செபங்கள் செய்ய ஆத்மா சாந்தி அடையும்
இதை அகவழிபாடு மூலம் செய்ய வேண்டும்

புற வழிபாடு மூலம்  செய்வதால் எந்த பயனும் இல்லை புற வழிபாட்டால் எந்த ஆத்மாவும் சாந்தி அடையர்து
இரண்டு நாடிகளும் சேர்ந்தால் ஆத்மா சாந்தி அடையும் என்பதைப் பற்றி சொன்ன சிவவாக்கியர் எப்படி சேர வேண்டும் என்பதை அடுத்த இரண்டு அடிகளில் சொல்கிறார்



“”””””””சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
       எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே””””””””””””””
இரண்டு நாடிகளும் சேர வேண்டுமென்றால், தினம் செபிக்கும் மந்திரம் ஒன்று ஒன்று உண்டு அது என்ன என்று விளக்குகிறார்

ராம நாம ஜெபம்
மூச்சுக் காற்றான பிராணனைரா என உள்ளே இழுக்க வேண்டும்
என வெளியே விட வேண்டும்
இதுவே ராம நாம ஜெபம் எனப்படுகிறது

ராம ராம ராம ராம என்று தொடர்ந்து ஜெபிக்க அதாவது ராம நாம ஜெபம் என்னும் மூச்சுப் பயிற்சியைச் செய்ய படர்க்கையாக விரிந்த நிலையில் உள்ள மனம் அடங்கி நம் கட்டுக்குள் வந்து உயிருடன் இணைகிறது
இதை விரிந்த மனம் சுருங்கி உயிராகி பரத்துடன் இணைகிறது என்று சொல்லலாம்

ஏவ்வாறெனில் ராம என்று சொல்ல மூச்சுக்காற்றான பிராணன் அக்கினியாக உருவாகி குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி சகஸ்ராரத்தின் வாசல்களைத் திறந்து சிவனுடன் இணையச் செய்கிறது
இங்கே ராம ராம என்ற சொல் வினைவேக ஊக்கியாகச் செயல்படுகிறது  

மேற்கண்ட ரகசியங்களை யார் ஒருவர்  உணர்ந்து கொண்டு ராம ராம - என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சகஸ்ராரத்தில் உள்ள சிவனுடன் கலக்கச் செய்கிறார்களோ அவர்களே  முக்தி அடைய முடியும் என்று சிவவாக்கியர் கூறுகிறார்



சிவவாக்கியர்----ராம நாம ஜெபம்----கர்ம வினைகள்
ராம நாம ஜெபம் எனப்படும் மூச்சுப் பயிற்சியைப் பயன் படுத்தி எவ்வாறு கர்ம வினைகளைத் தீர்ப்பது என்பதைப் பற்றி  சிவவாக்கியர்  கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்


“””””””””கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
        இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
        சதா விடாமல் ஓதுவார்  தமக்கு நல்ல மந்திரம்
        இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே”””””””””””

                                                                           ----------------சிவவாக்கியர்-------------


எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்தை கண்டு பிடித்து எதற்காக பிறந்தோமோ அந்த கடமையை முடித்து விட்டு எதில் போய் சேர வேண்டுமோ? அதில் போய் சேர்ந்து பிறவிப் பெருங்கடலை முடிக்க வேண்டும்

“””””””””கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்”””””””””””
இந்த பிறவிப் பெருங்கடலைக் கடக்க தடையாக இருப்பவை கர்மவினைகள் இந்த கர்மவினைகள் எப்படி தோன்றுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்
கர்ம வினைகள்
மனிதனிடம் ஆறு வகையான குணங்கள் இருக்கின்றன ஆறு வகையான குணங்கள் எனப்படுபவை  காம குரோத லோப மோக மத மாச்சரியம் எனப்படும்

இதனையே தமிழில் பேராசை சினம் கடும்பற்று முறையற்ற பால் கவர்ச்சி உயர்வு தாழ்வு மனபான்மை வஞ்சம் என்று கூறுவர்

இந்த ஆறு வகையான குணங்களில் மாட்டிக் கொண்டு ஒருவன் செய்வது பஞ்சமா பாதகங்கள் எனப்படும் பஞ்சமா பாதகங்கள் எனப்படுபவை பொய் சூது கொலை கொள்ளை கற்புநெறி பிறழ்தல் ஆகியவை ஆகும்

இந்த ஆறு வகையான குணங்களில் ஒருவன் மாட்டிக் கொண்டு ஒருவன் செய்யும் பஞ்சமா பாதகங்கள் கர்ம வினைகளை தோற்றுவிக்கின்றன இந்த கர்மவினைகளே ஒருவனை பிறவிப் பெருங்கடலில் சிக்க வைத்து துன்பச் சகதியில் சுழல வைக்கிறது
இத்தகைய துன்பங்களை கொடுக்கக் கூடிய கர்ம வினைகளை தீர்ப்பதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது என்கிறார்   சிவவாக்கியர்


”””இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்””””
இந்த மந்திரம் கர்ம வினைகளைத் தீர்க்கும் இந்த மந்திரம் கர்ம வினைகளைத் தீர்க்காது என்றும் சரியான மந்திரம் அதாவது உண்மையான மந்திரம் எது என்றும் தெரியாதவர்களை ஏழைகள் என்கிறார்  சிவவாக்கியர்

அவர் பணமில்லாதவர்களை ஏழைகள் என்று சொல்லவில்லை உண்மை மந்திரம் எது என்ற உண்மை நிலை தெரியாதவர்களைத் தான் ஏழைகள் என்று சொல்கிறார்

பாடலில் தொடர்ந்து கர்ம வினைகளை தீர்க்க ஒரு மந்திரம் உண்டு உண்டு என்று சொல்லி வந்த சிவவாக்கியர் தொடர்ந்து மந்திரத்தை உச்சரிப்பதின் மூலம் கர்ம வினையை தீர்க்கக் கூடிய மந்திரம் என்னவென்று அடுத்த அடிகளில் சொல்கிறார்



“”””””””””சதா விடாமல் ஓதுவார்  தமக்கு நல்ல மந்திரம்
        இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே””””””””””

மூச்சுக் காற்றான பிராணனைரா என்று உள்ளே இழுக்க வேண்டும்
என்று வெளியே விட வேண்டும்
இதே மாதிரி தொடர்ந்து ராம ராம ராம என்று தொடர்ந்து செய்யும் பொழுது மனம் சுருங்கி உயிராகி உயிர்  பரத்துடன் இணைவதன் மூலம் கர்ம வினை கழிகிறது

கர்ம வினை கழிய ராம ராம மந்திரம் என்னும் மூச்சுப் பயற்சி சிறந்த மந்திரமாக இருக்கிறது என்கிறார்   சிவவாக்கியர்
கர்ம வினைகளை கழிக்க மிகச் சிறந்த மந்திரம் ராம ராம ஜெபம் எனப்படும் - மூச்சுப் பயற்சியே என்கிறார்  சிவவாக்கியர்



சிவவாக்கியர்-----ராம நாம ஜெபம்---- ஆதி மூல ரகசியம்
ராம நாம ஜெபத்தைப் பயன் படுத்தி எவ்வாறு பிரபஞ்சத்தின் ஆதி மூல ரகசியத்தைத் தெரிந்து கொள்வது என்பதைப் பற்றி சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்
“””””””நான தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா
        கோண தேது? குருவ தேது? கூறிடும் குலாமரே
    ஆன தேது? ஆழிவ தேது? அப்புறத்தில் அப்புறம்
    ஈன தேது? ராம ராம ராம என்ற நாமமே””””””””””””””

                                                                                                                 ------------ சிவவாக்கியர்---------
“””””””நான தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா””””””””
நான் என்ற உடலுக்குள் உயிராக நிறைந்திருப்பது எது?
நீ என்ற உடலுக்குள் உயிராக நிறைந்து இருப்பது எது?
நான் நீ என்று சொல்லப்படும் இந்த உடலுக்குள் இருக்கும் உயிரானது தோன்றுவதற்கு பொதுவான காரணமாக இருப்பது எது என்று தெரியுமா?



“””””””கோண தேது? குருவ தேது? கூறிடும் குலாமரே”””””
கோ - என்றால் அரசன் நாட்டை ஆள்பவன் என்று பொருள்
கோன தேது என்றால் இருப்பு நிலையிலிருந்து நுண்ணலையான விண் என்ற Pவன் தோன்றி இயக்க நிலையாகி பிரபஞ்ச தோற்றங்களாகி இந்த பிரபஞ்சம் முழுவதும் உயிராக இருப்பதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆண்டு கொண்டிருப்பது எது? என்று பொருள்

குரு - என்றால் வழி தவறி நடக்காமல் வழி காட்டுபவன் என்று பொருள்
இந்த பிரபஞ்சம் முழுமையும் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களையும் இயக்க விதி மாறாமல் வழி நடத்திச் செல்வது எது? என்று பொருள்

இந்த ரகசியம் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள் என்கிறார்  சிவவாக்கியர்


“””””””ஆன தேது? ஆழிவ தேது? அப்புறத்தில் அப்புறம்
      ஈன தேது? ராம ராம ராம என்ற நாமமே”””””””””””””
 இந்த உலகம் என்று சொல்லக் கூடிய இயக்க நிலையில் உள்ள உயிர் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது எது
இந்த உலகம் எல்லாம் அழிந்த பிறகு உலகமெல்லாம் எஞ்சி இருக்கும் நீக்கமற நிறைந்து இருக்கக் கூடிய உயிரானது சென்று சேரும் இடம் எது?

உலகமெலாம் தோன்றுவதற்கு முன்பு இருந்தது எது? உலகமெலாம் அழிந்த பிறகு எஞ்சி இருப்பது எது?

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ராம ராம ராம ஜெபம் செய்ய வேண்டும் என்கிறார்  சிவவாக்கியர்
ராம நாம ஜெபம்
மூச்சுக் காற்றான பிராணனைரா என்று உள்ளே இழுக்க வேண்டும்
  என்று வெளியே விட வேண்டும்

இந்த ராம ராம ராம என்று சொல்லும் ராம நாம ஜெபத்தை அதாவது மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து வர விரிந்த மனம் சுருங்கி உயிராகி பரத்துடன் இணைகிறது
அதாவது மனம் அடக்கம் பெற்று ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதன் மூலம் மேலே சொல்லப்பட்ட பிரம்ம ரகசியங்கள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்

எனவே ராம ராம ஜெபம் எனப்படும் மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து பிரபஞ்ச ரகசியங்களைத் தெரிந்து கொள்வோம் என்கிறார்  சிவவாக்கியர்

No comments:

Post a Comment